|
| |
|
உங்களுடைய கவிதைகளை அனுப்ப - poem@lankasri.com
|
| |
|
|
மௌனவிரதம்.
|
 மனவானில் வந்திருந்து மகிழ்ந்து சிரிப்பது ஏன்..? மத்தாப்பாய் என் மனமும் மகிழ்ச்சியால் தினம் துள்ளுவதேன்..? சொல்ல தெரியாத சுகத்தை.. அள்ளித்தந்த உன் விழிகளை.. மறக்க முடியாமல் மனமோ.. புதுக்கவிதை சொல்கிறது. புரியாமல் நானோ உன்னை தெரியாமல் சந்தித்த நாளை நினைத்து நீ வருவாயென்று காத்திருக்கிறேன் எதிர்பார்த்து. வதைக்காதே கண்மணியே வாடிவிடும் என் மனது. தேடிவந்து நீதானே காதலை என் காதுகளில் சொன்னாய். சொன்ன விதம் கண்டு சொக்கி நான் போகையிலே நாணத்தால் முகம் சிவந்து நம்காதல் வாழுமென்றாய். மறந்திருக்கமாட்டாய் நீயும்.. மனமொத்த காதல் இது. பதியம் வைத்த மனம் பக்குவமாய் தானிருக்கும். வெல்லும் இக்காதலென்று விடியும் பொழுதுகளில் மனதுள் சிறகடித்து பறக்கிறது சின்ன சின்ன ஆசைகள். புரிந்திருக்கும் இது உனக்கு தெரிந்திருந்தும் ஏன்..? எதற்கு..? காதலுக்கு மௌனவிரதம் கண்மணியே நீயே சொல்..?
சிவனேஸ் (பிரான்ஸ்) |
இணைப்பு:
Nila |
28 Mar 2008
|
|
<<
Back
|
|