Poem of the day

தலை குனிந்து போகாது எங்கள் வீரம்

உப்புக்காற்றும் சிந்தும்
கண்ணீர் எங்கள் வாழ்வை பார்த்து '
தொப்புள் உறவு நீ
நீரில் நனைத்தாய் எங்கள் விழிகளை !

புரட்சி கவிதை K.கவி 25, May 2013 More

காதல் கவிதை

என்னோடும் எப்போதும்......

02, June 2012
Views 3238

சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம்
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே
சீரழிந்து போனதாய் என் காதல்...

இடமாற்றம் இடறிய போது
இல்லாமல் போன காதலால்
இதயம் ஓய்ந்ததே....
இன்றும் நீ காணாமல்
இதயம் பெரும் தடுமாற்றத்தில்......

பார்வையின் ஜீவிதத்தில்
பயணித்த நேசம்
பாதை மாறிப் போன போனதாய்.....
ஆனாலும்.....
பிரிந்து போனாய் நீ
நின் நினைவு மட்டும்  பிரியாமல்
என்னோடும் எப்போதும்.......