Poem of the day

காதலாகி…

உறைந்து போன என் இதயச் சாற்றினுள்
தேடுகிறேன் அவள் நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும்

காதல் கவிதை கல்முனையான் 21, May 2013 More

காதல் கவிதை

காதல் வலி

01, June 2012
Views 2068

காதல் என்ன ஒரு சாபமா?
கலைக் கூடத்தில் மோதும் கண்ணாடியா?
பாலை வனத்தில் வளரும் றோஜாவா?
பருவ மழையில் வளரும் பூக்களா?

துள்ளிக் குதிக்கும் இதயமே
அவள் தூங்கி எழும்பும் இதயமோ?
காதல் கொடுத்த வலியோ….எங்கும்
விசம் பரவும் மேனியோ?

நீ வாழ்ந்து வந்த என் உள்ளம்
தீயில் உருகும் மெழுகோ?
நீ காதலைத்தந்து பறித்த வலியோ
நான் விசத்தை பருகி மரித்த பலியோ?