ஏனையவை
செத்த வாழ்க்கையடா இது
![]() |
நான் பிறந்தேன் ஈழமதில்
நன்றாக படித்து விட்டேன்
பல்கலையும் கற்றுவிட்டேன்
இருந்தும் எனக்குள் ஒரு மோகம்
வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம்
பிடிக்க வேண்டுமென்று
அப்படியே கரம்பிடித்தாயிற்று
நானும் வந்துவிட்டேன் சொர்க்க வாழ்வுக்கு
கரம்பிடிக்க வந்தவரோ சிறுவயதில்
சொர்க்க நாடு வந்துவிட்டார்
அவருக்கோ தழிழ் தெரியாது
ஓரளவு தமிழ் பேசிடுவார்
சுளகு என்றால் சிரிக்கிறார்
இட்லி என்றால் சிரிக்கிறார்
சரியான வெய்யில் என்றால்
கனக்க சூரியன் என்கிறார்
கூழ் என்றால் அருவருக்கிறார்
என்னத்தை நான் சொல்ல
இன்னும் ஏராளம் கதையுண்டு
அதை சொன்னால் கறுமமடா
என்னருமை பெற்றோரே என்னதான்
உன் பிள்ளை தலைகீழாய்
நின்றாலும் எங்கள் உயிர் மொழியாம்
தமிழினை நன்றாக புகட்டிடுங்கள்

தாலாட்டு சொல்லி என்னை 




