ஏனையவை
கனவு
![]() |
கண்சிமிட்டி எனை அழைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கைகளினால் கட்டியணைத்தெனை
நெற்றியிலே முட்டுகிறாய்
விரல்களினால் தலைவருடி
வேடிக்கை காட்டுகிறாய்
தூங்காத என்விழிக்காய்
தாலாட்டுப் பாடுகிறாய்
வண்ணத்துப்பூச்சியதாய்
வட்டமிட்டு சிரிக்கின்றாய்
கன்னத்தில் கன்னம் வைத்து
கண் இமையால் வருடுகிறாய்
எனக்குள்ளே புத்துணர்வு
எழுகின்றேன் கண்விழித்து
அத்தனையும் கனவென்று
கரைகின்றேன் கண்ணீரில்....

உனக்கு நான் 




